Thursday 18 June 2015

பயிர் காப்பீடு வழங்கும் விழா

ராமநாதபுரம்:மாதவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. துணைப்பதிவாளர் செண்பக ராஜ், கள அலுவலர் ரவிச்சந்திரன், சங்கத்தலைவர் தாதா ஹயாத்து, துணைத்தலைவர் முனியாண்டி, செயலாளர் கபிராதன் பங்கேற்றனர். ஆர்.எஸ்.மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடந்த விழாவிற்கு, கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணை தலைவர் ராசு,முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்க செயலர் எம்.எஸ்.சுப்பிரமணியன், கள அலுவலர் அருணகிரி உட்பட பலர் பங்கேற்றனர். பின்னர் பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன.


Source:  http://www.dinamalar.com/district_detail.asp?id=1277991

No comments:

Post a Comment