Wednesday 10 June 2015

"551 விவசாயிகளுக்கு மண்வள அட்டை'

பெரம்பலூர் மாவட்ட வேளாண் துறையின் நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தின் மூலம் 551 விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றார் வேளாண் இணை இயக்குநர் (பொ) சு. அய்யாசாமி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண்மைத் துறையின் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் மூலம் கடந்த 21 ஆம் தேதி முதல் 18 கிராமங்களுக்குச் சென்று மண் மாதிரிகளை சேகரித்து, ஆய்வு செய்து விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை, 1,022 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, 551 விவசாயிகளுக்கு மண் ஆய்வு செய்து மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பயிர் சாகுடி செய்வதற்கு முன்பு, மண் மாதிரி எடுத்து ஆய்வு செய்து சாகுபடி செய்வதன் மூலம் பயிருக்கு தேவையான அளவு மட்டும் உரத்தை இட்டு சாகுபடி செலவை குறைக்க வாய்ப்பு உள்ளது.
குன்னம் வட்டம், துங்கபுரம் கிராமத்தில் வியாழக்கிழமையும் (ஜூன் 11), பெருமத்தூரில் 12 ஆம் தேதி, கீழப்புலியூர் அத்தியூர் மற்றும் அத்தியூர் குடிகாடு ஆகிய பகுதிகளில் 13 ஆம் தேதியும் மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்படவுள்ளன.
எனவே, விவசாயிகள் தங்களது வயலில் மண் மாதிரிகளை சேகரித்து கட்டணமாக ரூ. 20 செலுத்தி மண் ஆய்வு செய்து, அதன்படி உரங்கள் இட்டு சாகுபடி செய்து அதிக லாபம் பெற்று பயனடையலாம்.

No comments:

Post a Comment