Thursday 18 June 2015

ஜூன், 24ல் நாட்டுக்கோழி வளர்ப்போருக்கான பயிற்சி


நாமக்கல்:"நாட்டுக்கோழி வளர்ப்போருக்கு, கோடைகால நோய் பராமரிப்பு முறைகள் மற்றும் மூலிகை மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்த பயிற்சி முகாம், ஜூன், 24ம் தேதி நடக்கிறது' என, தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல்-திருச்சி சாலை, கால்நடை மருத்துவமனை வளாகத்தில் உள்ள, கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில், கோடைகால நோய் பராமரிப்பு முறைகள் மற்றும் மூலிகை மருத்துவத்தின் முக்கியத்துவம் என்ற தலைப்பில், ஜூன், 24ம் தேதி, மதியம், 1.30 மணிக்கு பயிற்சி முகாம் நடக்கிறது. பயிற்சி முகாமில், ஆர்வமுள்ள விவசாயிகள், நாட்டுக் கோழி வளர்ப்போர் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, 04286 233230 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Source:  http://www.dinamalar.com/district_detail.asp?id=1278136

No comments:

Post a Comment