Friday 17 April 2015

மார்த்தாண்டத்தில் வீட்டுத்தோட்ட பயிற்சி முகாம்

மார்த்தாண்டம் ஒய்.டபிள்யூ. சி.ஏ. வளாகத்தில் ஓராண்டு கால வீட்டுத்தோட்ட பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது. விழாவுக்கு பத்மராணி தலைமை தாங்கினார். கிரீன் அக்ரி கிளப் தலைவி சாந்தி முன்னிலை வகித்தார். ஜாக்குலின் வரவேற்று பேசினார். ஹெலன் ஆண்டறிக்கை படித்தார்.

நிகழ்ச்சியில், தேசிய பசுமைப்படை ஒருங் கிணைப்பாளர் ஜோபிரகாஷ், ஓய்வு பெற்ற வேளாண்மை அதிகாரி ராஜகுமார், கிரேஸ் கல்வி நிறுவன தாளாளர் கீதாபான்ஸ், பிரிகேடியர் சந்திரா ஆகியோர் வீட்டுத் தோட்டத்தின் அவசியம் குறித்து பேசினர். தொடர்ந்து, பியூலா, பிரமிளா, கஸ்தூரி போன்றவர்கள் தங்களின் வீட்டுத்தோட்டம் அனுபவங்கள் குறித்து பேசினர். பயிற்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு கிறிஸ்தவ கல்வியியல் கல்லூரி முதல்வர் பியூலா ஜெயந்தி பரிசு வழங்கினார். முடிவில், பிரேமா ஜாண் நன்றி கூறினார்.  

Source: Dailythanthi

No comments:

Post a Comment