பதிவு செய்த நாள்
30மார்2015
00:58
கள்ளிக்குடி : கள்ளிக்குடி பகுதியில் சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து வருவதால் மானாவாரியான அவுரியை பயிரிட்டு விவசாயிகள் வறட்சியை சமாளித்து வருகின்றனர்.
கள்ளிக்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் கண்மாய் மற்றும் குளங்கள் வற்றி கால்நடைகளுக்கு கூட குடிக்க தண்ணீர் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி விவசாய பணிகளை துவங்கிய விவசாயிகள் பாதியில் அதை விட்டனர். இதனால் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட பல பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து அழுகும் நிலை ஏற்பட்டது. வாழ்வாதாரத்தை தக்கவைக்க சிவரக்கோட்டை, கரிசல்காலன்பட்டி போன்ற கிராமங்களில் விவசாயிகள் அவுரி, நித்தியகல்யாணி செடிகளை பயிரிட்டுள்ளனர்.
கள்ளிக்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் கண்மாய் மற்றும் குளங்கள் வற்றி கால்நடைகளுக்கு கூட குடிக்க தண்ணீர் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி விவசாய பணிகளை துவங்கிய விவசாயிகள் பாதியில் அதை விட்டனர். இதனால் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட பல பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து அழுகும் நிலை ஏற்பட்டது. வாழ்வாதாரத்தை தக்கவைக்க சிவரக்கோட்டை, கரிசல்காலன்பட்டி போன்ற கிராமங்களில் விவசாயிகள் அவுரி, நித்தியகல்யாணி செடிகளை பயிரிட்டுள்ளனர்.
Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=1218075
No comments:
Post a Comment