Thursday 26 February 2015

நாமக்கல்லில் ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் 8 ஆயிரத்து 500 மூட்டை பருத்தி ரூ.1½ கோடிக்கு ஏலம் போனது.

பருத்தி ஏலம்

நாமக்கல் - திருச்செங்கோடு ரோட்டில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வியாழக்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் நேற்று சங்க தலைவர் தென்னரசு மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் முன்னி லையில் பருத்தி ஏலம் நடந்தது.

இந்த பருத்தி ஏலத்துக்கு நாமக்கல், புதுச்சத்திரம், எருமப்பட்டி, சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், பவித்திரம், வேலகவுண்டம் பட்டி என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 8 ஆயிரத்து 500 மூட்டை பருத்தியை விற் பனைக்கு கொண்டு வந்தி ருந்தனர்.

ரூ.1½ கோடிக்கு விற்பனை

இந்த பருத்தி மூட்டைகள் ஏறத்தாழ ரூ.1½ கோடிக்கு ஏலம் போனது. ஆர்.சி.எச்.ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 100 முதல் ரூ.4 ஆயிரத்து 470 வரைக்கும், டி.சி.எச்.ரக பருத்தி குவிண் டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 200 முதல் ரூ.4 ஆயிரத்து 920 வரைக்கும், சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 200 முதல் ரூ.5 ஆயிரத்து 120 வரைக்கும் ஏலம் போனது.

இந்த பருத்தி மூட்டைகளை கோவை, அவினாசி, திருப்பூர், திருச்செங்கோடு, கொங்கணா புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர். 

Source : http://www.dailythanthi.com/News/Districts/Namakal/2015/02/27002257/Business-1-million-Cotton-Auctions.vpf

No comments:

Post a Comment